கனமழை: சென்னையில் மின்சார ரயில் இயக்கம் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: கன மழை காரணமாக சென்னையில் மின்சார ரயில் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருவெற்றியூர் முதல் பேசின்பிரிட்ஜ் வரை தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால், இம்மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் நீர் அகற்றும் பணியில் ரயில்வே அதிகாரிகள் துரித கதியில் பணியாற்றி வருகிறார்கள்.
இதேபோன்று, கும்மிடிபூண்டியில் இருந்து சென்னை வரும் ரயில்கள், எண்ணூரிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications