தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் பல இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் பல இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஒருவாரமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
தமிழகம் மற்றும் கேரளா என இரண்டு மாநிலங்களிலும் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

எதனால்
வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்று மழை பெய்ய உள்ளது. வங்ககடல் பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்து வருகிறது. வெப்பசலனமும் இந்த மழைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது வலுப்பெற்று தற்போது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

ரெட் அலெர்ட்
முதலில் இதற்காக ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டது. கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று இந்த ரெட் அலெர்ட் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இன்று பெய்யும்
இந்த நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் நேற்று இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றில் இருந்து நாளை வரை இந்த கனமழை தொடரும். ரெட் அலெர்ட் திரும்ப பெறப்பட்டாலும், மழை பெய்யும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

எங்கு எல்லாம் பெய்யும்
சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அரசு ஏற்கனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications