தமிழகத்தைப் புரட்டிப் போட்ட கன மழைக்கு 14 பேர் பலி.. புதுச்சேரி அருகே கரையைக் கடந்த தாழ்வுமண்டலம்
சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களை குறிப்பாக வட கடலோர மாவட்டங்களை மிரட்டிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று இரவு ஏழரை மணியளவில் கரையைக் கடந்தது. புதுச்சேரி அருகே இது கரையைக் கடந்தது.
சில நாட்களுக்கு முன் தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்தது. இதனால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் மழை தீவிரம் அடைந்தது. நேற்று காலை 11.30 மணி அளவில் புதுச்சேரிக்கு கிழக்கு, தென்கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பிற்பகலில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் அதே இடத்தில் நிலை கொண்டிருந்தது தாழ்வு மண்டலம். பின்னர் மெதுவாக நகர ஆரம்பித்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நேற்று இரவு 7.30 மணி அளவில் புதுச்சேரி அருகே கரையை கடந்தது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததையொட்டி சென்னை, புதுச்சேரி, கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கன மழை கொட்டியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், வட கடலோர மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அம்பத்தூரில் பேய் மழை...
சென்னை புறநகர்களில் மிக பலத்த மழை பெய்ததால் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. புறநகர்களிலேயே அதிக அளவாக அம்பத்தூரில் 20 செமீ மழை பதிவானது. கடலூர் மாவட்டத்தில் நேற்று பலத்த காற்றுடன் அடைமழை கொட்டியது. நெய்வேலியில் அதிகபட்சமாக 45 சென்டி மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.
கனமழை தொடரும்...
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த போதும் கடலூர் மாவட்டத்திலும், புதுச்சேரியிலும் காற்றுடன் மழை பெய்தது. காற்றழுத்த மண்டலம் நிலப்பகுதிக்குள் வந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதால், வட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.
14 பேர் பலி...
நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், புதுவையிலும் 14 பேர் மழை தொடர்பாக பலியாகியுள்ளனர். சென்னையில் மட்டும் 5 பேர் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் 3 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 பேரும், கன்னியாகுமரி, திருவாரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா ஒருவரும், புதுச்சேரியில் ஒருவரும் பலியாகி உள்ளனர்.
விமானங்கள் தாமதம்:
தொடர் மழை காரணமாக சென்னை வந்த விமானங்கள் நான்கு மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தன. சுமார் 40 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.
-
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது!












Click it and Unblock the Notifications