அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: நாளை துவங்குகிறது கத்தரி.. பொதுமக்கள் அச்சம்
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. எனினும் கோடையின் உச்சம் என கருதப்படும் கத்தரி வெயில் நாளை முதல் துவங்க உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால் வேலைக்கு செல்வோர் உட்பட சாலையில் செல்வோர் என அனைத்து தரப்பு மக்களுமே கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவது மாவட்ட மக்கள், மற்றும் விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன. நேற்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் சூறைக்காற்றுடன் மழை பெய்திருக்கிறது. அதேபோல மாநிலத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்திருக்கிறது.
எனினும் கோடையின் உச்சமென கருதப்படும் கத்தரிவெயில் நாளை முதல் துவங்க இருக்கிறது. பொதுவாக 24 நாட்கள் இந்த கத்தரி வெயில் இருக்கும் என்றும் இந்நேரங்களில் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படும்.
முன்பெல்லாம் கத்தரி வெயிலின்போதுதான் 100 டிகிரி வெப்பம் பதிவாகும். ஆனால் நடப்பு மாத துவக்கத்திலேயே 100 டிகிரியையும் தாண்டி வெயில் தீயாய் கொளுத்தி எடுத்துவிட்டது. இதில் வரப்போகும் கத்தரி வெயில் எப்படி இருக்குமோ, அதனை எப்படி எதிர்கொள்வதோ என மக்களுக்கு பீதி கிளம்பி உள்ளது.
இந்நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் உள் மாவட்டங்களிலும், வேலூர்,சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெப்பநிலையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் கரூர்,திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 40 முதல் 42 டிகிரி வரை நீடிக்கும் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications