For Daily Alerts
Just In
17ம் தேதி கரையைக் கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்... கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் 17-ம் தேதி கரையை கடக்க இருப்பதாகவும், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன். அப்போது அவர் கூறியதாவது:-
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறி பாம்பன் - நாகப்பட்டினம் இடையே 17-ம் தேதி கரையை கடக்கும். அப்போது 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.
தென் தமிழகத்தில் பல இடங்களில் பலத்த மழையும், வடதமிழகத்தின் சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். சென்னையில் மேகமூட்டம் காணப்படுவதுடன், ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும்' என்றார்.
Comments
English summary
A low pressure area over the Indian Ocean has become well-marked and was likely to cross the Tamil Nadu coast between Pamban and Nagapattinam on Tuesday after intensifying as a deep depression, bringing heavy rains in parts of the state, the meteorological Department said today.
Story first published: Sunday, May 15, 2016, 16:21 [IST]