ராஜராஜ சோழன் 1031வது சதயவிழா... நவ.9ல் தஞ்சாவூரில் உள்ளூர் விடுமுறை
மா மன்னர் ராஜ ராஜ சோழனின் 1031வது ஆண்டு சதய விழாவை முன்னிட்டு நவம்பர் 9ம் தேதியன்று ஒரு நாள் தஞ்சை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
தஞ்சை: தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்துக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக புகழ் பெற்று விளங்கும் பெரிய கோயிலை கட்டிய பேரரசர் ராஜராஜ சோழன் பிறந்த நாள் சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மா மன்னர் ராஜராஜசோழன். அவரை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

ஐப்பசி மாதத்தில் சதயம் நட்சத்திரத்தில் பிறந்ததால் சதய விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 1031வது ஆண்டு சதய விழா வருகிற 8, 9ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. எனவே, இதனை முன்னிட்டு முன்னிட்டு வருகிற 9ம் தேதியன்று ஒரு நாள் மட்டும் தஞ்சை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications