கருணாநிதி உடல் வைக்கப்பட்ட இடம் சீரடைந்தது!
கருணாநிதி உடல் வைக்கப்பட்ட இடத்தை சுற்றி இருந்த கூட்டம் கலைக்கப்பட்டு சீரானது.
சென்னை: கருணாநிதி உடல் வைக்கப்பட்ட இடத்தை சுற்றி இருந்த கூட்டம் கலைக்கப்பட்டு சீரானது. முக்கிய பிரமுகர்கள் வரும் வழி பாதையும் சரி செய்யப்பட்டு காவல்துறையினர் தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழுடலை மெரினாவில் அடக்கம் செய்வதையடுத்து திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பில், கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் இறுதி ஊர்வலத்தில் அமைதி காத்து, தமிழனத்தின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்களுக்கு இறுதி வணக்கம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

கருணாநிதி உடல் வைக்கப்பட்ட இடத்தை சுற்றி இருந்த மக்கள் கூட்டத்தை கலைத்து சீரமைக்குமாறு ஸ்டாலின் காவல்துறையினரை கேட்டுக்கொண்டார். அதன்படியே காவல்துறையினர் அந்த இடத்தை சுற்றி உள்ள அனைத்து இடங்களில் இருந்தும் மக்களை அகற்றி தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதனால் எந்த வித இடையூறும் இல்லாமல் கருணாநிதி இறுதி ஊர்வலம் அமைதியான முறையில் நிறைவுபெறும் என்று நம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications