தீபா யாரென்றே எனக்கு தெரியாது... அவரை போயஸ் தோட்டத்தில் நான் பார்த்ததில்லை... ராஜம்மாள்
சென்னை: தீபா யாரென்றே எனக்கு தெரியாது என்றும் அவரை போயஸ் தோட்டத்தில் நான் பார்த்தது கூட இல்லை என்றும் ஜெயலலிதா வீட்டு சமையலர் ராஜம்மாள், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வந்துள்ளன.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபத ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இங்கு இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு வந்துள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சசிகலா குடும்பத்தினர், முன்னாள், இன்னாள் அரசு அதிகாரிகள் என விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தார் நீதிபதி ஆறுமுகாமி.
அதற்கடுத்தபடியாக ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஐயப்பன், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர்களும் ஆஜராகினர்.
ஜெயலலிதாவை சசிகலா தாக்கிய போது கீழே விழுந்த அவரை தூக்கிவிட முயன்ற சமையலர் ராஜம்மாளை சசிகலா மிரட்டியதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அவரிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது.
அதன்படி நேற்றைய தினம் ராஜம்மாள் ஆஜரானார். அப்போது அவர் தீபாவை எனக்கு தெரியாது. அவரை நான் போயஸ் தோட்ட இல்லத்தில் பார்த்ததும் இல்லை அவர் கூறியது போல், அங்கு அடியாட்கள் யாரும் இல்லை என்று ராஜம்மாள் கூறியதாக விசாரணை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications