For Daily Alerts
Just In
5 மீனவருக்கு தூக்கு- ராஜபக்சே கொடும்பாவி எரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்!
கடலூர்: தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவ கொடும்பாவியை கடலூர் உட்பட பல நகரங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை நீதிமன்றத்தில் 5 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பதற்றமும் கிளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, பண்ருட்டி, நெய்வேலி, விழுப்புரம் உள்ளிட்ட பல இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இலங்கை அதிப ராஜபக்சேவின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments
sri lanka rajapaksa velmurugan tvk இலங்கை ராஜபக்சே வேல்முருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம் கொடும்பாவி
English summary
Tamizhaga Vazhvurimai Katchi cadres burnt an effigy of Sri Lankan President Mahinda Rajapaksa in many places condemning the death sentence to 5 Tamilnadu fishermen.
Story first published: Thursday, October 30, 2014, 19:40 [IST]