கமல் கட்சியெல்லாம் ரெண்டு இல்ல நாலு அமாவாசைக்குள்ள காணாமல் போய்விடும்- ராஜேந்திர பாலாஜி
Recommended Video
சிவகாசி: கமல் கட்சியெல்லாம் இரண்டு அல்லது 4 அமாவாசைக்குள் காணாமல் போய்விடும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில் புதிது புதிதாக யார் யாரோ கட்சியை தொடங்குகிறார்கள்.
[ அய்யயோ.. 30,000 பெண்கள் 60,000 கணவர்களை வைத்துள்ளனரா? அமைச்சரின் அபத்த பேச்சால் சர்ச்சை ]
அமாவாசை
கமல் கட்சியாக இருக்கட்டும். மற்ற எந்த நடிகரின் கட்சியாகட்டும். எதுவுமே நிலைக்காது. கமல் மாதிரியானவங்க கட்சியெல்லாம் ஒரு அமாவாசைல காணாம போய்டும்.
தேசியக் கட்சி
இல்லாட்டி ரெண்டு அமாவாசை, அதுவும் இல்லையா, நாலும் அமாவாசைல காணாமல் போய்விடும். அதே போல்தான் தேசிய கட்சிகளுக்கும் இங்கே வேலை இல்லை. பாஜக, காங்கிரஸ் கம்யூனிஸ்ட் எந்த தேசியக் கட்சிக்கும் இங்கே வேலை இல்லை.
ஆளும்கட்சி
நம்ம கூட ஒட்டிக்கலாம், உறவாடி இருந்துக்கலாம். மத்தபடி தனியா எதுவும் பண்ண முடியாது. இங்கே இருக்க போறது அதிமுகவும் திமுகவும்தான். அதிமுக ஆளும்கட்சியாக இருக்கும். திமுக நம்மை எதிர்த்து கேள்வி கேட்கும் கட்சியாக இருக்கும். அவ்வளவுதான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
பாஜகபாஜகவுக்கு அதிமுக அடிபணிகிறது என்ற கருத்து நிலவி வரும் நிலையில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர். ஒரு காலத்தில் மோடி எங்கள் ஆட்சியை காப்பாற்றுவார் என்று கூறிய இதே அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ இன்று பாஜகவுக்கு இங்கு வேலை இல்லை என்று கூறியுள்ளார். வுக்கு இங்கு வேலை இல்லை
பாஜகவுக்கு அதிமுக அடிபணிகிறது என்ற கருத்து நிலவி வரும் நிலையில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர். ஒரு காலத்தில் மோடி எங்கள் ஆட்சியை காப்பாற்றுவார் என்று கூறிய இதே அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ இன்று பாஜகவுக்கு இங்கு வேலை இல்லை என்று கூறியுள்ளார்.