சட்டசபைத் தேர்தலுக்காக தமிழகத்திற்கு 385 பார்வையாளர்கள் வருகை - ராஷேஜ் லக்கானி தகவல்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி 385 பார்வையாளர்கள் தமிழகம் வர உள்ளனர் என்று தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு வருகிற மே 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே சோதனை நடத்தி, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கடைசி தேதி நேற்றுடன் முடிந்து விட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரி தமிழகம் முழுவதும் ஆன்லைனில் 6 லட்சத்து 55 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு மட்டும் வண்ண அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும். திருத்தம் கோரி விண்ணப்பித்தவர்கள் ரூபாய் 25 செலுத்தினால் வண்ண அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒரு செலவின பார்வையாளர் வீதம் 234 செலவின பார்வையாளர்களும், பறக்கும் படையில் இடம் பெறும் பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரிகள் 118 பார்வையாளர்களும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பார்வையாளர் வீதம் 33 போலீஸ் பார்வையாளர்களும் 19 ஆம் தேதி தமிழகம் வருகிறார்கள். அந்த வகையில் மொத்தம் 385 மத்திய பார்வையாளர்கள் வருகிறார்கள்.
அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்களுக்கு ஆட்களை அழைத்து வருவதாக புகார்கள் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதற்காக தேர்தல் அதிகாரிகள் வீடியோகிராபர்களை அழைத்துச் சென்று பொதுக்கூட்டத்துக்கு வருபவர்களிடம் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பன போன்ற விவரங்களை கேட்டு பதிவு செய்வார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
-
சிபிஐ தொடங்கி ED வரை.. எல்லாருக்கும் பறந்த லெட்டர்.. தமிழக தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் -
"327 பார்வையாளர்கள் நியமனம்".. தமிழகத்தை கண்ட்ரோலில் எடுத்த தேர்தல் ஆணையம்.. அதிரடி அறிவிப்பு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்!












Click it and Unblock the Notifications