அரசியல் அறிவிப்பை வெளியிடாமல் ஏமாற்றிய ரஜினி... மனமுடைந்த சேலம் ரசிகர் தற்கொலை முயற்சி!
நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளில் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடாததால் மனமுடைந்த சேலத்தை சேர்ந்த ரசிகர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சேலம்: அரசியலுக்கு வருவது பற்றி நடிகர் ரஜினிகாந்த் எந்த அறிவிப்பையும் வெளியிடாததால் சேத்தை சேர்ந்த ஏழுமலை என்ற ரசிகர் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கடந்த நவம்பர் 12ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பிறந்தநாளன்று ரசிகர்களை சந்திப்பார் என்றும் அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் செய்திகள் பரவின. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அன்றைய தினம் இருந்தனர்.
ஆனால் அதிகாலையிலேயே போயஸ் கார்டன் வீட்டை விட்டு வெளியேறி நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் யாரையும் சந்திக்கவில்லை. இரவு 9 மணியளவில் தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி என்று போட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு எண்ட் கார்டு போட்டார்.

மனமுடைந்த ரசிகர்
இதனால் சேலம் அழகாபுரம் பாறைவட்டத்தைச் சேர்ந்த ஏழுமலை என்ற ரசிகர் மன்றத் தலைவர் கடந்த இரண்டு நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தனது வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்து ஏழுமலை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை
வீட்டில் மயங்கிக் கிடந்த ஏழுமலையை குடும்பத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஏழுமலை உயிர் பிழைத்துள்ளார்.

ரஜினியால் தான் நல்ல செய்ய முடியும்
உயிர் பிழைத்துள்ள ஏழுமலை தான் தற்கொலைக்கு முயன்றது ஏன் என்றும் கூறியுள்ளார். பிறந்தநாளன்று ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று காத்திருந்தேன். ஆனால் அவர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ரஜினி அரசியலுக்கு வந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும், இந்த அறிவிப்பை வெளியிடாத விரக்தியிலேயே தற்கொலைக்கு முயன்றேன் என்று அவர கூறியுள்ளார்.

ரசிகர்கள் ஆறுதல்
இதனிடையே உயிர் பிழைத்துள்ள ஏழுமலையை சந்தித்து ரசிகர் மன்றத்தினர் ஆறுதல் கூறி வருகின்றனர். இனிமேல் இப்படியொரு காரியத்தில் ஈடுபடக் கூடாது என்றும் அவர்கள் ஏழுமலையிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications