பகவதி அம்மனே... ரஜினி அரசியலுக்கு வரனும்! - ரசிகர்கள் சிறப்பு வழிபாடு
ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் கூடலூர் பகவதி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தேனி: ரஜினிகாந்த அரசியலுக்கு வரவேண்டும் என ரஜினி ரசிகர்கள் கோயிலில் சிறப்பு பூஜையும் வழிபாடும் நடத்தி வேண்டிக்கொண்டனர்.
நடிகர் ரஜினிகாந்த 1996ஆம் ஆண்டு தொலைக்காட்சிகளில் தோன்றி அரசியலுக்கு 'வாய்ஸ்' கொடுத்தார். அதன்பிறகு பல்வேறு சந்தர்ப்பங்க்லளில் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து சொல்லி வந்தார்.

அவருடைய கருத்துகள் அரசியலுக்கு வருகிறார் என திட்டவட்டமாக அறிவிப்பதாக இல்லை என அவரது ரசிகர்களே வருத்தப்ப்ட்டுகூறினர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ரசிகர்களை சந்தித்து ஆலோசித்தார். அப்போது போர் வரட்டும் பார்க்கலாம் என கூறினார். அதன்பிறகு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடந்துகொண்டிருந்தாலும் ரஜினி அதுகுறித்து 'வாய்ஸ்' கொடுப்பதில்லை.
இந்நிலையில், 18 மாவட்டங்களை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் கூடலூரில் உள்ள பகவதி அம்மன் ஆலயத்தில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications