பெரியார், காமராஜர் போல அனைவருக்கும் பொதுவானவர் ரஜினி! - ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: பெரியார், காமராஜர் போல அனைவருக்கும் பொதுவான மனிதர் ரஜினிகாைந்த். அதனால்தான் அவர் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவு தரக் கூடாது என்று சொன்னேன், என்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
அரசியல் பற்றி ரஜினிகாந்த் எதுவும் வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், பாஜகவும் காங்கிரசும் திமுகவும் ஆளாளுக்கு அவரை தங்கள் பக்கம் அழைத்து வருகின்றனர்.
அதிமுகவினரோ, ரஜினியின் ஆதரவு தங்களுக்குத்தான் என்று கூறிவருகின்றனர்.

காங்கிரஸிலிருந்து தனியாகப் பிரிந்து போன வாசன், தனது புதிய கட்சிக்குத்தான் ரஜினி ஆதரவு அளிக்க வேண்டும் என்று உரிமையுடன் கோரி வருகிறார்.
இந்த சூழலில்தான், ரஜினி எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு தரக்கூடாது. அவர் அரசியலுக்கு வராமலிருப்பதே நல்லது என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிரடியாகப் பேட்டி அளித்தார்.
ரஜினியை அரசியலுக்கு வரக்கூடாது என அவர் கூறியது ஏன்? பாஜகவுக்கு ஆதரவு தந்துவிடுவாரோ என்ற அச்சமா என்று ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் கேட்டபோது, "நிச்சயம் அந்த அடிப்படையில் சொல்லவில்லை. ரஜினி பொதுவான மனிதர். சிறந்த மனிதாபிமானி.
பெரியார், காமராஜர் போன்றவர்களை அரசியலுக்கு அப்பாற்பட்டு, மக்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். இதேபோல் ரஜினிகாந்தும் எல்லோருக்கும் பொதுவானவர். அவரது ரசிகர்கள் எல்லா கட்சியிலுமே உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் உள்ளனர். அப்படிப் பார்த்தால் அவர் காங்கிரஸுக்கு ஆதரவு தரவேண்டும் என்றுதான் நாங்கள் கேட்டிருக்க வேண்டும்.
ஆனால் அடிப்படையில் நல்ல மனிதரான ரஜினி, குறுகிய வட்டத்துக்குள் அடைபடக் கூடாது என்பதுதான் என் கருத்து. விரைவில் அவரைச் சந்திக்கவும் உள்ளேன்," என்றார்.












Click it and Unblock the Notifications