ரஜினி மன்றத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர்கள்... அதிர்ச்சியில் சேலம் திமுக
ரஜினி மன்றத்தில் மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் சேலம் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video

சென்னை: ரஜினி மக்கள் மன்றத்தில் மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர்கள் மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது சேலம் திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி சுதாகரிடம் இருந்து சேலம் மாவட்ட பொறுப்பாளர்களுக்குக் கடிதம் ஒன்று சென்றுள்ளது. அன்புத் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஒப்புதலோடு நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர் என்ற குறிப்புடன் தொடங்குகிறது அந்தக் கடிதம்.
அதில், கடந்த 14.3.2018 புதன்கிழமை அன்று நடைபெற்ற சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஆலோசனைக் கூட்ட முடிவில், சேலம் மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளுக்கு புதிய நிர்வாகிகளை அறிவிக்கிறோம். இவர்களுக்கு மன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

வீரபாண்டி ராஜா
அவர் வெளியிட்டிருந்த பட்டியலில், தி.மு.க முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர்கள் இருந்ததுதான் ஹைலைட். இதுபற்றி நம்மிடம் பேசிய சேலம் மாவட்ட தி.மு.க பிரமுகர் ஒருவர், " சேலம் மாவட்டத்தையே தனது விரல் அசைவில் வைத்திருந்தார் தி.மு.க முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். அவருடைய மகன் ராஜா, தற்போது சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக இருக்கிறார்.

திமுகவிடம் விருந்து விலகிய உறவுகள்
உடல்நலக் குறைவு காரணமாக 2012-ம் ஆண்டு இறந்தார் வீரபாண்டி ஆறுமுகம். அதன்பிறகு, தி.மு.க மீதான அவரது குடும்ப உறவுகள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

வீரபாண்டி ஆறுமுகம் உறவினர்
தற்போது ரஜினி மக்கள் மன்றத்தின் சேலம் மாவட்ட பொறுப்பாளராக நீலா ஜெயக்குமார் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். வீரபாண்டி ராஜாவின் நெருங்கிய சம்பந்தி இவர். ராஜாவின் இரண்டாவது மகளுக்கு இவரது குடும்பத்தில் இருந்துதான் மாப்பிள்ளை எடுத்துள்ளனனர்.

ராஜாவின் சம்பந்தி
அதேபோல், ராஜாவின் முதல் மகளின் மாமனார் இளவரசன், கடலூர் மாவட்ட நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரே குடும்பத்தில் சம்பந்தம் செய்த இரண்டு சம்பந்திகளும் ரஜினி மன்றத்தை நாடிப் போனதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. வீரபாண்டியார் இருந்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்காது என ஆதங்கப்படுகின்றனர் சேலம் திமுகவினர்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications