For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜினி உருவபொம்மையை நாட்டு வெடி குண்டு வைத்து வெடித்த தமிழர் முன்னேற்றப் படை - வீடியோ

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்த்து அரஜினியின் வீட்டு முன்பு தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினர் போராட்டம் நடத்தினர். நாட்டு வெடிகுண்டு வைத்து ரஜினியின் உருவ பொம்மையை தகர்த்தனர். அதனால் அவர்கள் கைது ச

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: ரஜினியின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்த தமிழர் முன்னேற்றப் படை அமைப்பை சேர்ந்தவர்களை காவல்துரை கைது செய்துள்ளது. மேலும் போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்துக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ரஜினி கடந்த வாரம் மாவட்ட வாரியாக தன் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது போர் வரட்டும் பார்க்கலாம் என தன் அரசியல் பிரவேசம் குறித்து கருத்துத் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் தமிழர்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக இணயத்தில் என்னை விமர்சிக்கிறார்கள் என கேள்வி எழுப்பினார். 44 வருடங்கள் தமிழகத்தில் வாழ்வதால் நான் தமிழன் என்றார்.

 Rajini's entry in politics and thamilar munnetra padai conducted protest

தமிழகத்தில் ஸ்டாலின்,சீமான்,அன்புமணி,திருமாவலவன் போன்ற தலைவர்கள் இருந்தாலும் சிஸ்டம் சரியில்லை என்றார். இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டணங்கள் எழுந்தன. இந்நிலையில் தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்கள் அதன் தலைவர் வீரலட்சுமி ரஜினி வீட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுவோம் என அறிவித்திருந்தனர். இதையடுத்து ரஜினி வீட்டு முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழர் முன்னேற்றப்படையை சார்ந்தவர்கள் ரஜினியின் உருவ பொம்மையை நாட்டு வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். மேலும் சிலர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். வீரலட்சுமி உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

English summary
Tamilar munnetra padai conducted protest against Rajini in front his poes house and they were arrested.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X