"ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது" - ஈவிகேஎஸ் இளங்கோவன் பொளேர் !
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம் என்பதை நண்பராக வேண்டுகோள் வைப்பதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவரா வரமாட்டார என்ற கேள்வி தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அப்படி ஒரு வேளை அவர் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி தொடங்குவாரா அல்லது வேறு எதாவது கட்சியுடன் கூட்டணி அமைப்பார என பல்வேறு சர்ச்சைகள் பரவி வருகின்றன.
ஒருபுறம் ரஜினியின் வருகைக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் எனக் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், ரஜினி அரசியலுக்கு வருவதும், வராததும் அவர் விருப்பம். அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. அரசியலுக்கு வர அவருக்கு உரிமை உள்ளது. ஆனால், ரஜினி அரசியலுக்கு வந்தால் மிகப் பெரிய மாற்றம் வருமா, வராதா என்று சொல்ல முடியவில்லை.
தனிப்பட்ட முறையில் சொல்ல வேண்டுமென்றால் ரஜினி அரசியலுக்கு வரவேண்டாம் என்பதை நண்பராக இந்த வேண்டுகோளாக வைக்கிறேன். ஏனென்றால், தமிழகத்தில் எல்லா சமயத்தைச் சார்ந்தவர்களுக்கும், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களுக்கும் ரஜினி பொதுவானவராக உள்ளார். அவர் அரசியல் என்ற சிறு வட்டத்துக்குள் தன்னை அடைத்துக்கொள்ளக் கூடாது என்றார்.