For Daily Alerts
Just In
'கள்ளம் கபடமில்லாத அபூர்வ மனிதர்'- மெல்லிசை மன்னர் உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி!
சென்னை: மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை சாந்தோமில் உள்ள விஸ்வநாதன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் இன்று நண்பகல் 12 மணிக்கு வந்தார்.
அவர் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், 'மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் திரை இசையின் சிகரம்... அபூர்வ மனிதர். வாழ்க்கையில் மறக்க முடியாதவர். கள்ளம் கபடமில்லாத அபூர்வ மனிதர்," என்றார்.
எம்எஸ்வியும் ரஜினியும் கடைசியாகப் பணியாற்றிய படம் சிவப்புச் சூரியன் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Rajinikanth has paid his tributes to late MS Viswanathan today at his Santhome residence.
Story first published: Tuesday, July 14, 2015, 12:57 [IST]