உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே நியாயமான தீர்வு- ரஜினி
உச்சநீதிமன்றத் தீர்ப்புபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே நியாயமான தீர்வு என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே நியாயமான தீர்வு என்று ரஜினிகாந்த் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
காவிரி தொடர்பாக ஒரு திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 6 வாரங்கள் கெடு அளித்தும் இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஒரு துரும்பையும் கிள்ளி போடவில்லை.
மாறாக காவிரி மேற்பார்வை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேற்பார்வை குழு வேண்டாம், மேலாண்மை வாரியம்தான் தேவை என்று கோரி தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி வாரியம்
கெடு முடிய இன்று கடைசி நாள் என்ற போதிலும் இன்று மாலை 5 மணி வரை காத்திருக்கலாம் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கூறுகையில் காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே நியாயமான தீர்வாக இருக்க முடியும்.
நம்பிக்கை
காவிரி வாரியம் மட்டுமே நாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வாக இருக்கும். நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.
|
விமர்சனங்கள்
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான ரஜினி காவிரி விவகாரத்தில் சொந்த மாநிலத்தின் பக்கம்தான் என்ற பேச்சு நிலவுகிறது. மேலும் காவிரி விவகாரம் தலைத்தூக்கும் போதெல்லாம் அது குறித்து மௌனமாகவே இருந்து விடுவார் என்று விமர்சனங்கள் அவர் மீது வைப்பது உண்டு.
குரல் எழுப்பிய ரஜினி
தற்போது அரசியலுக்கு வரும் எண்ணத்தில் உள்ள ரஜினி கடந்த சில நாட்களுக்கு முன்பு இமயமலைக்கு சென்றபோது கூட காவிரி தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றுவிட்டார் என்ற நிலையில் தற்போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.