புயலால் சீரழிந்த ஆந்திராவுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கினார் ரஜினிகாந்த்!
சென்னை: மூன்று மாதங்களுக்கு முன்பு ஹூட் ஹூட் புயலால் சீர்குலைந்த ஆந்திராவுக்கு ரூ.5 லட்சம் உதவி அளித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
தெலுங்கானாவுக்கு பிரித்து கொடுத்தது போக புதிதாக உருவான ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையில் அரசு அமைந்த சில மாதங்களிலேயே அங்கு ஹுட்ஹுட் புயல் கோரத்தாண்டவம் ஆடியது.

இந்த புயலால் பல நூறு கோடி நஷ்டம் ஏற்பட்டது. உயிர்கள் பல பலியாகின. விசாகபட்டிணம் நகரமே முற்றிலும் உருகுலைந்தது. மீட்பு பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டன.

இதைத்தொடர்ந்து, ஆந்திர அரசுக்கு உதவுவதற்காக, தெலுங்கு திரையுலகினர், நிதி திரட்டும் நிகழ்ச்சியை நடத்தினர். தெலுங்கு திரையுலகின் அனைத்து முன்னணி நடிகர், நடிகைகள், கலைஞர்கள் அதில் பங்கேற்றனர்.

இந்நிலையில், தமிழ் நடிகர் ரஜினிகாந்த்தும், ஆந்திர முதல்வரின் நிவாரண நிதிக்கு, ஐந்து லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். பொதுமக்கள் நிவாரண நிதியாக ஶ்ரீராகவேந்திரா பப்ளில் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் ஐந்து லட்சம் (டிடி) ஆந்திர முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications