வாயே திறப்பதில்லை என்ற புகாரிலிருந்து தப்பிக்க ரஜினி திட்டம்.. உண்ணாவிரதம் இருக்க ஆலோசனையாம்!
நதிநீர் இணைப்புக்காக உண்ணாவிரதம் இருந்தது போல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடிகர் ரஜினிகாந்த் விரைவில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : நதிநீர் இணைப்புக்காக உண்ணாவிரதம் இருந்தது போல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடிகர் ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து டெல்டா மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. தமிழக அரசியல் கட்சியினரும், விவசாய அமைப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்தி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, எனினும் விவசாயிகளின் ஜீவாதார பிரச்னை என்பதால் போராட்டங்களை பொறுத்துக் கொண்டுள்ளனர்.
ஆளும் அதிமுக ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த நிலையில் திமுக தனது தோழமைக் கட்சிகளுடன் சேர்ந்து தொடர்ந்து 5 நாட்களாக சாலை மறியல், ரயில் மறியல், உண்ணாவிரதம் என பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.

கமல் கண்டன பொதுக்கூட்டம்
கடந்த பிப்ரவரி மாதத்தில் புதிதாக அரசியல் கட்சி தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் திருச்சியில் நேற்று கண்டன பொதுக்கூட்டத்தை நடத்தினார். இந்த போராட்டத்தை காவிரி போராட்டம் என்றும் அறிவித்தார்.

நடிகர் சங்கம் போராட்ட அறிவிப்பு
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்ரல் 8ம் தேதி தென் இந்திய நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த அறவழிப்போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி ஆதரவு
இந்த போராட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளார். எனினும் புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ள ரஜினி காவிரி விவகாரத்தில் மவுனமாக இருப்பதை அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

ரஜினி மீதான விமர்சனங்கள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று ஒரு பதிவை மட்டுமே ரஜினி போட்டார். ஆனால் அதற்கு பின்னர் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் ரஜினி அமைதியாகவே இருப்பதை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

உண்ணாவிரத முடிவில் ரஜினி
இதனால் நதிநீர்இணைப்புக்காக உண்ணாவிரதம் இருந்தது போல விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ரஜினி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உண்ணாவிரதப் போராட்டம் குறித்து திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் எங்கு எப்போது உண்ணாவிரதம் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications