கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்தார் ரஜினிகாந்த்
Recommended Video

சென்னை: கருணாநிதியின் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சல் செலுத்தினார்.
கருணாநிதி கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை நேற்றைய தினம் மோசமடைந்தது.

இதையடுத்து கருணாநிதிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் தொடர்ந்து இன்றைய தினமும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை.
இதையடுத்து அவரது உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்தன. பின்னர் கருணாநிதியின் உயிர் மாலை 6.30 மணிக்கு பிரிந்தது. அவரது உடல் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் உடலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்.
ரஜினிகாந்தும் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பெருங்கூட்டத்துக்கு மத்தியில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications