கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுத்திருக்காவிட்டால் நானே போராடியிருப்பேன் - ரஜினிகாந்த்
கருணாநிதி இல்லாத தமிழகத்தை நினைத்து பார்க்க முடியவில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுத்திருக்காவிட்டால் நானே போராடியிருப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு சினிமா துறை சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஸ்டாலின், ரஜினி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருணாநிதியின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் ரஜினி கூறுகையில் கருணாநிதி இல்லாத தமிழகத்தை நினைத்து பார்க்க முடியவில்லை.
நான் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி கிளம்பி வந்தபோது அந்த காலையிலேயே அப்படி ஒரு கூட்டம். அதைப் பார்த்து நான் அசந்து விட்டேன். கருணாநிதிக்காக கூடிய கூட்டத்தைப் பார்த்ததும், என்றென்றும் நன்றி மறவாதவர்கள் தமிழர்கள் என்று நெகிழ்ந்தேன். கருணாநிதி இறுதி நிகழ்ச்சிக்கு வந்த மக்கள் கூட்டம் அதை நிரூபித்தது. கூட்டத்தைப் பார்த்து பிரமித்துப் போனேன்.

மெரீனாவில் இடம் கொடுத்திருக்காவிட்டால் நானே போராட்டத்தில் குதித்திருப்பேன். கருணாநிதியால் அரசியலுக்கு வந்தவர்கள் பல லட்சம் பேர். தமிழகம் பெரிய அடையாளத்தை இழந்துவிட்டது. 50 ஆண்டில் பல்வேறு சூழ்ச்சி, துரோகங்களை தாண்டி கட்சியை காத்தவர் கருணாநிதி.
சிவாஜி, எம்ஜிஆர் ஒரே படத்தில் சூப்பர் ஸ்டார் ஆக்கியவர் கருணாநிதி. மலைக்கள்ளன் படத்தின் மூலம் எம்ஜிஆரை ஸ்டார் ஆக்கியவர் கருணாநிதி. சிவாஜியையும் ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாராக்கியவர் இவர்தான் என்றார் ரஜினிகாந்த்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications