துப்பாக்கிச் சூடு: திமுக சட்டசபை புறக்கணிப்பு பற்றி 'நோ' கருத்து.. ரஜினி 'படபட'
திமுக சட்டசபையை புறக்கணித்தது பற்றி கருத்து சொல்ல இயலாது என்கிறார் ரஜினிகாந்த்.
Recommended Video
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு விவகாரத்தில் சட்டசபையை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க இயலாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தோரை சந்தித்து ஆறுதல் கூற சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்டுள்ளார் ரஜினிகாந்த். அதற்கு முன்னதாக சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு ரஜினிகாந்த் அளித்த பேட்டி:
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் திமுக மீது முதல்வர் கூறை கூறி இருக்கிறார். இதுபோன்ற விவகாரங்களில் ஒருவரை ஒருவர் குறை சொல்வது சரியில்லை. எப்போதும் பின்னாடியே திரும்பிப் பார்த்து கொண்டிருக்கக் கூடாது.
தூத்துக்குடிக்கு சென்று அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நல்லெண்ண அடிப்படையில் பார்த்து ஆறுதல் கூற இருக்கிறேன். அங்கு கட்சி நிர்வாகிகளுடன் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை.
சட்டசபையை திமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறித்து எந்த கருத்தும் இல்லை. இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.