ரஜினி தனிக்கட்சிதான் தொடங்குவார்.. சந்தேகமில்லை! - திருநாவுக்கரசர்
புதுக்கோட்டை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சிதான் தொடங்குவார். சந்தேகமில்லை என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், "யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதை எதிர்ப்பது ஜனநாயக விரோதம்.

நடிகர் ரஜினிகாந்த் எப்போதோ அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். எனக்குத் தெரிந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், அவர் மாநில கட்சிகளுடனோ அல்லது தேசிய கட்சிகளுடனோ இணைய மாட்டார். அவர் தனிக்கட்சிதான் தொடங்குவார்.
தமிழகத்தில் யார் மூலம் பா.ஜ.க. வளர முடியும் என்று கணக்குப் போட்டே அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் ரஜினிகாந்தை அழைக்கின்றனர். முதலில் அவர் அரசியல் கட்சி தொடங்கட்டும். அதன் பிறகு காங்கிரஸ் கட்சி அவரை கூட்டணிக்கு அழைக்குமா? என்பதை முடிவு செய்வோம்.












Click it and Unblock the Notifications