வேலூர் சிறையில் முருகன் ஜீவசமாதி அடைய முயற்சி- 3வது நாளாக உண்ணாவிரதம்
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் சிறையில் ஜீவசமாதி அடைய முயற்சிக்கும் வகையில் உண்ணாவிரதத்தை தொடருகிறார்.
Subscribe to Oneindia Tamil
வேலூர்: ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் ஜீவசமாதி அடைய முயற்சிக்கும் வகையில் 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
வேலூர் சிறையில் உள்ள முருகன் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு சாமியாராகவே மாறிவிட்டார். அத்துடன் சிறை வாழ்க்கையை தொடர விரும்பவில்லை; ஜீவசமாதி அடைய விரும்புகிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு முருகன் கடிதம் அனுப்பியுள்ளார்.

கடந்த ஜூலை 26-ந் தேதி முதல் முருகன் ஒருவேளை உணவு மட்டுமே எடுத்துக் கொண்டார். கடந்த 18-ந் தேதி முதல் ஜீவசமாதி அடையும் முயற்சியாக நீரை மட்டும் குடிக்கிறார்.
இன்று 3-வது நாளாக முருகன் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார். முருகனின் இந்த உண்ணாவிரதம் தொடர்ந்தால் அவர் மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக சேர்க்கபப்டுவார் என்று வேலூர் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications