ஆளுநர் கருணை காட்ட வேண்டும்.. நளினி தாய் உருக்கம்
சென்னை: ஆளுநர் கருணை காட்ட வேண்டும் என்று நளினி தாயார் பத்மாவதி தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் 161வது பிரிவின்கீழ் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது தமிழக அமைச்சரவை.
இதுகுறித்து, நளினியின் தாயார், பத்மாவதி டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஆளுநர் கருணை காட்ட வேண்டும். கருணையுள்ளத்தோடு, எனது மகளை விடுதலை செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பத்மாவதி.
நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், ஆளுநர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். 27 வருடங்கள் அவர்கள் சிறைகளில் கழித்துள்ளார் என்பதை ஆளுநர் பரிசீலிப்பார் என நினைக்கிறேன். நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.