விடுதலையளிக்க மறுக்கும் அரசு.. ஐநா மனித உரிமை ஆணையத்திற்கு நளினி கடிதம்
அரசியல் காரணங்களால் தன்னுடைய விடுதலை மறுக்கப்படுவதாக ராஜூவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: அரசியல் காரணங்களால் தன்னை மத்திய மாநில அரசுகள் முன்கூட்டியே விடுதலை செய்ய மறுப்பதால் இந்த விவகாரத்தில் தலையிடுமாறு ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி, ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக சிபிஐ புலனாய்வு செய்து, கொலையில் தொடர்புடையவர்கள் என்று 26 பேரை கைது செய்து விசாரணை நடத்தியது.
இந்த வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஆனால் 2000ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி நளினியின் மரண தண்டனையை தமிழக ஆளுனர் ஆயுள் தண்டனையாக குறைத்தது.

ஐநாவிற்கு கடிதம்
ஆனால் தொடர்ந்து நளினி தன்னை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார். இந்நிலையில் ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்திற்கு நளினி 6 பக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

பாகுபாடு
அதில் தன்னுடைய விடுதலையில் மத்திய, மாநில அரசுகள் பாகுபாடு காட்டுவதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். கடந்த 25 ஆண்டுகளாக நான் சிறையில் உள்ளேன். ஆனால் நன்னடத்தை காரணமாக கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் நடைமுறையை மாநில அரசு வைத்துள்ளது.

அரசியல் ரீதியிலான அணுகுமுறை
16 ஆண்டுகளுக்கு முன்பே நான் இதற்கு தகுதி பெற்றுவிட்டாலும் என்னை முன்கூட்டியே விடுதலை செய்யாமல் ராஜூவ் காந்தி படுகொலையில் தொடர்பு என்ற ஒரே காரணத்திற்காக அரசியல் ரீதியாக என்னுடைய உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சட்டப்படி நான் விடுதலையாக எந்தத் தடையும் இல்லை, ஆனால் அரசியல் காரணங்களாலேயே நான் இன்னும் பாதிக்கப்படுகிறேன்.

வலியுறுத்தல்
எனவே சட்டம் 72 மூலம் மனித உரிமைகள் ஆணையம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நளினி கோரியுள்ளார். மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே 1965ம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி நளினி இந்த கடிதத்தை மனித உரிமைகள் ஆணையத்திற்கு எழுதியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications