ராம மோகன ராவை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கும் தமிழக அரசு.. சஸ்பெண்ட் செய்யாதது ஏன்?
ராம மோகன ராவை காத்திருப்போர் பட்டியலில் தமிழக அரசு வைத்துள்ளதே தவிர சஸ்பெண்ட் செய்யவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: ஐடி ரெய்டுக்கு உள்ளான முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்கின்றன.
தலைமைச் செயலராக இருந்த ராம மோகன ராவ் வீடு மற்றும் அவரது மகன் விவேக் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி பணம், தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளது.

ரெய்டு நடந்து ஒருநாள் கழித்த பிறகு, நேற்று மதியம்தான், ராம மோகன ராவ் தலைமைச் செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். மூத்த ஐஏஎஸ் அதிகாரி, கிரிஜா வைத்தியநாதன் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
ஆனால், இதுவரை ராம மோகன் ராவ் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டுமானால் ஐடி துறை ரிப்போர்ட் தாக்கல் செய்ய வேண்டும், பிறகு விசாரணை அமைப்பு ஒன்று விசாரணை நடத்தி குற்றத்திற்கான அடிப்படை ஆதாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதனிடையே, ராம மோகன ராவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று பாமக இளைஞர் பிரிவு தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications