தமிழகத்தில் ரமலான் நோன்பு தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை: வளைகுடா நாடுகளில் நேற்று ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், இன்று தமிழகத்தில் ரமலான் நோன்பு தொடங்கியது.
இதை தமிழக அரசின் தலைமை காஜியார் அறிவித்துள்ளார். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து ரமலான் நோன்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று முதல் இஸ்லாமியர்கள் நோன்பைத் தொடங்கியுள்ளனர். 30 நாட்கள் இந்த நோன்பு கடைப்பிடிக்கப்படும். நோன்பின் இறுதியில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.
ரமலான் நோன்பு தொடங்கியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டன.
முன்னதாக வளைகுடா நாடுகளில் நேற்று ரமலான் நோன்பு தொடங்கியது. கோவையிலும் கூட நேற்றே நோன்பைத் தொடங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications