தேவையற்ற வாழ்த்து:
சார்க் அமைப்பின் மாநாட்டில் நேற்று பேசும்போது கூட, ‘‘ மனித உரிமைகள் இப்போது ஒரு நாட்டை ஒடுக்குவதற்கான அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட உலகில் எந்த அமைப்புக்கும் அதிகாரம் இல்லை'' என்று கூறி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தை அவமதித்துள்ளார்.
இராஜபக்சேவின் சர்வாதிகாரப் போக்கினால் அங்குள்ள மக்களே அவரை ஏற்கத் தயாராக இல்லை. இராஜபக்சே கட்சியின் பொதுச்செயலாளரான மைத்ரிபால சிறிசேனா என்பவரே அந்தக் கட்சியிலிருந்து விலகி இராஜபக்சேவை எதிர்த்து பொதுவேட்பாளராக போட்டியிடுகிறார். இதனால் இராஜபக்சே தோல்வியடைவது உறுதியாகிவிட்ட நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பது தேவையற்றதாகும்.
ஈழப் பிரச்சினையில் தமிழர்களின் உணர்வுகளை மதித்து, அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பிரதமர் செயல்படுவதே சரியான அணுகுமுறை ஆகும். எனவே, ஒன்றரை லட்சம் தமிழர்களின் இனப்படுகொலைக்கு நீதி பெற்றுத் தரும் வகையில், ஐ.நா. மனித உரிமை ஆணையரின் விசாரணைக்கு இந்தியா உதவ வேண்டும். இவ்விசாரணைக்கு இலங்கை முட்டுக்கட்டை போட்டு வரும் நிலையில், ஐ.நா மனித உரிமை ஆணையரின் விசாரணைக் குழுவினர் சென்னையில் போர்க்குற்ற விசாரணையை நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.