காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது அத்தனை பெரிய கடினமான செயலா?: பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது அத்தனை பெரிய கடினமான செயலா என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரங்களுக்குள் அமைக்க முடியாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து இருப்பது வேதனை அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பேச்சு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரங்களில் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், அதற்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று கட்கரி கூறியிருப்பது அவரது கடமையை தட்டிக்கழிக்கும் செயலாகும்.
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க முடியாது என்பதற்காக அமைச்சர் கூறும் எந்த காரணங்களையும் ஏற்க முடியாது. மேலாண்மை வாரியம் அமைப்பது அமைச்சர் கூறுவது போன்று அவ்வளவு கடினமான பணி அல்ல.
மேலாண்மை வாரியத்தின் அதிகாரங்கள் என்னென்ன? என்பதை நடுவர் மன்றம் வரையறுத்துள்ளது. சுருக்கமாகக் கூறினால் பக்ரா- பியாஸ் வாரியத்தின் நகலாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று நடுவர் மன்றம் அறிவுறுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பிரதமர் மோடியுடன் வலியுறுத்துவதற்காக, இனியும் காத்திருக்காமல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு உடனடியாக டெல்லி செல்ல வேண்டும்.
அங்கு பிரதமரிடம் வலியுறுத்துவதுடன் கடமை முடிந்து விட்டதாக நினைக்காமல், அங்கேயே முகாமிட்டு அனைத்து அறப்போராட்ட வழிமுறைகளையும் பயன்படுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பிறகு தான் தமிழகம் திரும்ப வேண்டும். இந்த முயற்சிக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய்யை எதிர்த்து.. பெரம்பூரில் களமிறங்கும் பாமகவின் திலகபாமா! அன்புமணியின் மூவ்! -
பெரம்பூரில் திலகபாமா, தருமபுரியில் சவுமியா, விருத்தாசலத்தில் தமிழரசி! பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு -
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications