குற்றவாளி சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: தண்டிக்கப்பட்ட குற்றவாளியான சசிகலாவை சிறையில் சந்தித்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், சீனிவாசன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தண்டிக்கப்பட்ட குற்றவாளியான சசிகலாவை அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், சீனிவாசன் ஆகியோர் சிறையில் சந்தித்து பேசியுள்ளனர். இது அனைத்து வகையிலும் தவறு. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் கட்சி தலைமை பொறுப்பில் இருக்கக் கூடாது என்று சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications