இன்று முத்தப் போராட்டம்... நாளை மூத்திரப் போராட்டமா.... ராமகோபாலன் ஆவேசம் !
கோவை: இன்று முத்தப்போராட்டம் நடத்துபவர்கள் நாளை மூத்திரப்போராட்டம் நடத்துவார்கள் எனக் காட்டமாக தெரிவித்துள்ளார் இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன்.
சமீபகாலமாக கிஸ் ஆப் லவ் (முத்தப் போராட்டம் ), ஹக் ஆப் லவ் ( கட்டி அணைக்கும் போராட்டம் ) என ஆங்காங்கே நடத்தப்படும் போராட்டங்கள் சர்ச்சையை உண்டாக்கி வருகிறது. இதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பும், கண்டனங்களும் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று கோவை, ஆர்.எஸ்.புரத்தில் இந்து முன்னணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் கலந்து கொண்டார்.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமகோபாலன் கூறியதாவது :-
''இந்து முன்னணி இயக்கத்தின் முதல் தலைவர் தானுலிங்க நாடாரின் நூற்றாண்டு தொடக்க விழா அடுத்த ஆண்டு ஜூன் 7ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவையில் நடைபெறும் அந்த மாநாட்டின் இடம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications