மாநாட்டின் நோக்கம்...
இந்து முன்னணியின் கொள்கை, கோரிக்கைகள் மக்களுக்கு போய் சேர வேண்டும். மக்களுடைய பிரச்னைகள் இந்து சமூதாயத்துக்கு தெரிய வேண்டும் என்பதற்காக இந்த மாநாடு நடக்கிறது. கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, உதகை, திருப்பூர் ஆகிய பகுதிகளை மையப்படுத்தி மாநாடு நடைபெறுகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இப்போது முதலே தொடங்கப்பட்டு வருகிறது.
இந்து சமூதாயம் பலவீனமாக இருப்பதால் யார் வேண்டுமானாலும் போட்டு மிதிக்கலாம் என்ற நிலை உள்ளது. மற்ற சமுதாயத்தை பற்றி பேச யாருக்கும் வார்த்தை வராது. பேசினால் என்ன ஆகும் என்பது தெரியும். இந்துக்கள் ஒற்றுமையாக இல்லாததுதான் காரணம். தீண்டாமையும், சாதிச்சண்டையும்தான் இந்துக்களின் எதிரியாக இருக்கிறது.
இதனை நீக்க அங்காங்கே திண்ணைக் கூட்டங்கள் நடத்தி வருகிறோம். சாதிச் சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சாதியில் இருந்து மதம் மாறினால் சாதிக்கு மட்டும் இழப்பு இல்லை. இந்து சமுதாயத்துக்கும் இழப்புதான்.