போராட்டம்...
அறநிலையத்துறை சொத்துக்களை தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தடுக்க, அந்தந்த கோயில்களில் போராட்டம் நடத்த வேண்டும். கோயில்களில் தரிசனம் கட்டண வைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, பகுதி வாரியாக மட்டுமில்லாமல், சின்னச் சின்னச் கோயில்களுக்கும் சொல்லி வருகிறோம். பலன் கிடைத்து வருகிறது. அதனை முற்றிலுமாக அகற்ற நாள்கள் தேவை. அதற்கு பொறுமை தேவை. அந்த நம்பிக்கையுடன் இந்து முன்னணி காத்திருக்கிறது.

அடுத்து மூத்திரப் போராட்டமா?
முத்தப் போராட்டம் நடத்துவதை கலாச்சார சீரழிவாகத்தான் பார்க்கிறேன். ஏதோ சில அராத்துக்கள், கிறுக்குத்தனமாக இருப்பவர்கள் விளம்பரம் தேடிக் கொள்வதற்காக செய்கிறார்கள். இன்று முத்தப்போராட்டம் நடத்துகிறார்கள். நாளை மூத்திரப்போராட்டம் நடத்துவார்கள். நாடு முழுவதும் அது நடக்கவில்லை. ஆகையால், கலாச்சார சீரழிவு என ஒட்டுமொத்தமாக முத்திரை குத்த முடியாது. மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications