இன்னிக்கு மழை வரும்னு ரமணன் சொல்றார்... வருமா?
சென்னை: இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.
கோடை தொடங்கிய சில தினங்களிலேயே கடுமையான வெய்யில் தாக்க ஆரம்பித்துவிட்டது. ஆனால் கடந்த 4 நாட்களாக வங்கக் கடல் காற்றும், அரபிக் கடல் காற்றும் சேர்ந்து சாதமாக வீசுவதால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், "தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
மேலும் லட்சத்தீவுக்கு மேல் மேலடுக்கில் சுழற்சி உள்ளது. இப்படி 2 காரணங்களால் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் இன்றும் (வெள்ளிக் கிழமை) மழை பெய்யும். உள்மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும்," என்றார்.
ரமணன் சொன்னபடி மழை வருமா? பார்க்கலாம்!












Click it and Unblock the Notifications