சென்னை & கடலோரவாசிகளே... ரமணன் சொல்லிட்டார்.. 3 நாட்களுக்கு உஷாரா இருங்க!
சென்னை: தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, கடலோர மாவட்டங்களில் பலத்த மழை அல்லது மிக பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
ஞாயிற்றுக்கிழமையன்று தென் கிழக்கு வங்கக் கடல், அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில், புதிதாக உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இது, திங்கள்கிழமை காலை 8.30 மணியளவில் தென் மேற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டுள்ளது.

எச்சரிக்கை
அடுத்த 24 மணி நேரத்தில், கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழை பெய்யும். குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை இருக்கும்.

மிகப் பலத்த மழை..
மேலும், கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழை அல்லது மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

3 நாள்களுக்கு மழை நீடிக்கும்
சென்னை மாநகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் விட்டு விட்டு மழை இருக்கும். பலத்த மழை பெய்யவும் வாய்ப்புண்டு. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, அடுத்து வரும் 3 அல்லது 4 நாள்களுக்கு நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

மீனவர்கள்
தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம் ஆகிய கடலோரப் பகுதிகளில், வட கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். குறிப்பாக, ஆந்திர கடலோரப் பகுதிகளிலுள்ள மீனவர்கள் கடலுக்குள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.

"சராசரி அளவைவிட கூடுதல் மழை'
வட கிழக்குப் பருவ மழைக் காலத்தில், இதுவரை சென்னை மாவட்டத்தில் 1,170 மி.மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 790 மி.மீட்டர் ஆகும். அதே போல், தமிழகத்தில் சராசரி அளவைக் காட்டிலும் கூடுதலாக 70 மி.மீ. கிடைத்துள்ளது. அதாவது, 510 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மாநிலத்தின் சராசரி மழையளவு 440 மி.மீ.

இதுவரை...
திங்கள்கிழமை காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் குடவாசலில் 120 மி.மீ. மழை பதிவாகியது. இதேபோல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 100 மி.மீ., வானூர், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், விழுப்புரம், புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி ஆகிய இடங்களில் தலா 90 மி.மீ. மழை பதிவாகியது. மேலும், தஞ்சாவூர், திருநெல்வேலி மாவட்டம் ஆய்க்குடி, திருவாரூர், தஞ்சை மாவட்டம் பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் தலா 80 மி.மீ. மழை பதிவானது," என்றார் ரமணன்.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications