வாடிவாசலுக்காக போராடிய மாணவர்களே.. எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வாங்க.. ராமேஸ்வரம் மீனவர்கள்
வாடிவாசலுக்காக போராட்டம் நடத்திய மாணவர்கள் எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வரவேண்டும் என ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை: வாடிவாசலுக்காக போராட்டம் நடத்திய மாணவர்கள் எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வரவேண்டும் என ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மத்திய அரசு கடலில் எல்லைக்கோட்டை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் பிரிட்ஜோ என்ற 22 வயதான தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் கொல்லப்பட்டார்.
சிங்கள கடற்படையின் இந்த கொலைவெறித் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிங்கள கடற்படையின் வெறிச்செயலுக்கு தமிழக மீனவர் பலியானது தமிழக மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்கள் போராட்டம்
சிங்கள கடற்படையின் துப்பாக்கிச்சூட்டால் தமிழக மீனவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை உட்பட தமிழகத்தில் உளள அனைத்து இலங்கை நிறுவனங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் போராட்டம்
சிங்கள கடற்பயின் தாக்குதலைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப்போராட்டத்தில் பெண்கள் குழந்தைகள் என மீனவர்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எல்லைக்கோட்டை அமைக்கனும்
அப்போது பேசிய மீனவர்கள், தாங்கள் பாமரர்கள் எங்களுக்கு எல்லை தெரியாது. கடலில் மத்திய அரசு எல்லைக்கோட்டை அமைக்கவேண்டும்.

உயிருக்கு உத்தரவாதம் இல்லை
நாங்கள் கொள்ளையடிக்கவோ திருடவோ கடலுக்கு செல்லவில்லை. வயிற்று பிழைப்புக்காகத்தான் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறோம். எங்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

மாணவர்கள் முன்வரவேண்டும்
வாடிவாசலுக்காக போராடிய மாணவர்கள் எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முன்வர வேண்டும். எங்களின் உயிரை காப்பாற்ற மாணவர்கள் போராட்டம் நடத்த முன்வர வேண்டும். இவ்வாறு ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தின் போது கோரிக்கை விடுத்தனர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications