Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

12 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படையை கண்டித்து இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: 12 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் அனுமதிச் சீட்டு பெற்று மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி மார்க்கோ என்பவருக்கு சொந்தமான விசைப்படகை தடுத்து நிறுத்தினர்.

12 மீனவர்கள் கைது

12 மீனவர்கள் கைது

அதிலிருந்த 12 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அதிகாரிகள், விசைப்படகுடன் மயிலிட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்டுள்ள 12 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை கடற்படையின் இச்செயலுக்கு ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நிதியை பெற்றுக்கொண்டு கைதா?

நிதியை பெற்றுக்கொண்டு கைதா?

"இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து அரசை மீட்பதற்காக இந்திய அரசு பல கோடி ரூபாய் நிதி உதவி அளித்து வருகிறது. இந்த நிலையில் எல்லை தாண்டியதாக 12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம்." என்றனர்.

இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரையும் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக இலங்கை அரசு விடுவிக்க வேண்டும் என வலியுறுத்திய மீனவர் சங்கத்தினர், படகுகளையும் விடுவிக்க கேட்டுக்கொண்டுள்ளனர். இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்."

இன்று மீனவர்கள் வேலைநிறுத்தம்

இன்று மீனவர்கள் வேலைநிறுத்தம்

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்த 125 படகுகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், அதில், தவறவிடப்பட்டுள்ள 4 படகுகளின் பெயர்களை சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். அத்துடன் 12 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. அதன்படி மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாமல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+