மீனவர் படுகொலை: சிங்கள அரசைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் செல்போன் டவரில் ஏறி 4 பேர் போராட்டம்
தமிழக மீனவர் படுகொலைக்கு காரணமாக இலங்கை கடற்படையைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் செல்போன் டவரில் ஏறி 4 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம்: தமிழக மீனவர் பிரிட்சோவை சுட்டுப் படுகொலை செய்த சிங்கள கடற்படையின் கொலைவெறியைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் 4 பேர் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த இலங்கை கடற்படை கண்மூடித்தனமான துப்பாக்கிக் குண்டு மழை பொழிந்தது. தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்த போது இந்த கொலைவெறித்தனத்தில் சிங்கள கடற்படை ஈடுபட்டது.
இதில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற 22 வயது இளைஞரின் கழுத்தில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. உடனடியாக அவரை ராமேஸ்வரம் கரைக்கு கொண்டுவர மீனவர்கள் முயற்சித்தனர். ஆனால் நடுக்கடலிலேயே பிரிட்சோ உயிரிழந்து போனார்.

2011-ம் ஆண்டுக்குப் பின்னர் மீனவர் படுகொலைகளை நிறுத்தி வைத்த சிங்கள கடற்படை தற்போது வெறியாட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது. இந்த படுபாதக படுகொலையைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் செல்போன் டவரில் ஏறி 4 இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications