சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் மட்டுமே குற்றவாளி: சென்னை போலீஸ் கமிஷனர்
சென்னை: சுவாதி கொலை சம்பவத்தில் ராம்குமாருக்கு யாரும் உடந்தை கிடையாது என்று சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே. ராஜேந்திரன் தெரிவித்தார்.
சுவாதி கொலை தொடர்பாக நெல்லை மாவட்டத்தில் ராம்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் சென்னையில் காலை 11.30 மணியளவில் நிருபர்களை சந்தித்தார் கமிஷனர் ராஜேந்திரன்.

கமிஷனர் கூறியதாவது: சுவாதி கொலையாளியின் சிசிடிவி புகைப்படத்தை வைத்து சென்னையின் பல பகுதிகளில் போலீசார் விசாரித்தனர். சுவாதி தினசரி பயணிக்கும் இடங்களுக்கும் போலீசார் சென்று விசாரித்தனர்.
விசாரணையின்போது, பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து போலீசாருக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன. சுவாதி குடும்பத்தாரும் போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர். சோகமான நிலையிலும் கூட போலீசாருக்கு, சுவாதி பெற்றோரும், குடும்பத்தாரும் ஒத்துழைத்ததற்கு நன்றி.
பல கோணங்களில் நடந்த விசாரணையினால் குற்றவாளி யார் என்பது தெரியவந்தது. குற்றவாளி பற்றி அடையாளம் தெரிந்ததும், அவர் நெல்லை மாவட்டத்தில் பதுங்கியிருப்பதை உறுதி செய்துகொண்டு, கொலையாளியை பிடிக்க நெல்லை காவல்துறை உதவியை அணுகினோம்.
இதையடுத்து, நெல்லை போலீசார் ராம்குமாரை கைது செய்ய உதவினர். காவல்துறையினர் நெருங்கியபோது ராம்குமார் வீட்டின் பின்னால் மறைந்திருந்தார். போலீசாரை பார்த்ததும் அவர்களை பயமுறுத்தும் நோக்கத்தில் ராம்குமார் கூரிய ஆயுதத்தால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
நெல்லை மருத்துவமனையில் ராம்குமார் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சென்னையிலிருந்து சிறப்பு விசாரணை குழு நெல்லை சென்று விசாரணையை தொடங்கியுள்ளது.
புலன் விசாரணைக்கு உதவி செய்த பொதுமக்கள், சுவாதியின் பெற்றோர் மற்றும் மீடியாக்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
பொதுமக்கள் அச்சத்தை போக்குவதற்காக சென்னை காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து கொலையாளியை விரைந்து கைது செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதன்பிறகு, நிருபர்கள் மடக்கி மடக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு நழுவியபடியே பதிலளித்தார் கமிஷனர். அதுகுறித்த விவரம்:
சுவாதி வேலைக்கு செல்லும் நேரங்களில் ராம்குமார் பின் தொடர்ந்து தொல்லை செய்துள்ளார். இது சிலகாலமாகவே நடந்து வந்துள்ளது.
அதேநேரம், கொலைக்கான காரணம் குறித்து இப்போது முழுமையாக கூற முடியாது. சிகிச்சை முடிந்து, நெல்லை டாக்டர்கள் அனுமதியளித்த பிறகே ராம்குமார் சென்னை அழைத்து வரப்படுவார்.
சுவாதி கொலையில் ராம்குமாருக்கு உடந்தையாக யாரும் செயல்படவில்லை. அவர் மட்டுமே கொலைக்கு பொறுப்பாளி.
ராம்குமாருக்கு கொலையிலுள்ள நேரடி தொடர்பு பற்றிய ஆதாரங்களை இப்போது வெளியிடமுடியாது. மீடியாக்கள் தயவு செய்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். குற்றவாளியின், அடையாள அணிவகுப்பு முடியாமல் குற்றவாளியின் போட்டோவையும் காவல்துறை தற்போது வெளியிட முடியாது. இவ்வாறு கமிஷனர் தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications