அதிகரிக்கிறது “பச்சரிசி” பயன்பாடு- ஆனால் ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு
சேலம்: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பச்சரிசி வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. ஆனால் ரேஷன் கடைகளில் பச்சரிசிக்குப் பற்றாக்குறை நிலவுகிறது.
தமிழக ரேஷன் கடைகளில் வினியோகிக்கும் புழுங்கல் அரிசி பழுப்புநிறத்தில் காணப்படுகிறது. மேலும் சமைத்தாலும் சாதம் பெரிது பெரிதாக இருக்கும்.
இருப்பினும், ரேஷன் அரிசியை வாங்கும் பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்கள், அந்த அரிசியை இட்லி மாவாக அரைத்து பயன்படுத்துகின்றனர்.

பளபளப்பான பச்சரிசி:
சேலம் மாவட்ட கிராமப்புறங்களில் கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் பச்சரிசி, வெள்ளை நிறத்தில் பளபளப்பாகவும், சமைத்தால் சாப்பாடு சன்னமாக ருசி மிகுந்தும் காணப்படுகிறது.

மவுசு கூடிய பச்சரிசி:
அதனால், ரேஷன் கடை பச்சரிசிக்கு தற்போது மவுசு கூடியுள்ளது. ரேஷன் கடையில் பச்சரிசி வாங்குவதற்கு பொதுமக்கள் முண்டியடித்து வருகின்றனர்.

நீண்ட வரிசையில் மக்கள்:
ரேஷன் கடையில் அரிசி வினியோகிக்கும் தினத்தன்று அதிகாலை நேரத்திலேயே ரேஷன்கடையை முற்றுகையிடும் குடும்ப அட்டை தாரர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து பச்சரிசியை வாங்கி செல்கின்றனர்.

பச்சரிசிக்கு தட்டுப்பாடு:
கிராமப்புற ஏழை எளியோர் மட்டுமின்றி, நடுத்தர மக்களும் ரேஷன் கடை பச்சரிசியை வாங்கி பயன்படுத்துவது அதிகரித்துள்ளதால், ரேஷன் கடையில் பச்சரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தரமான பச்சரிசி விநியோகம்:
எனவே, அனைத்து பகுதிக்கும் இரு மாதத்திற்கு ஒரு முறையாவது தட்டுபாடின்றி தரமான பச்சரிசி விநியோகிக்க, தமிழக அரசு முன்வரவேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications