For Daily Alerts
Just In
புத்தகங்களை தேடித் தேடிப் படிக்க வேண்டும்- ரங்கசாமி
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் புத்தகக் கண்காட்சி ஏ.எப்.டி மைதானத்தில் வெள்ளிக் கிழமை துவங்கியது. இப்புத்தக விற்பனை கண்காட்சிக்கு கலைப் பண்பாட்டுத்துறையின் அமைச்சர் தியாகராஜன் தலைமை தாங்கினார்.
கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்துப் பேசினார். விழாவில் அவர் பேசுகையில்,
தொழில் நுட்பம் முன்னேறியுள்ள இந்த கால கட்டத்தில் புத்தகம் இல்லாமலேயே வேறு வகையில் கருத்துகளை அறிந்தாலும், புத்தகங்களை படிப்பதின் மூலம் தான் அந்த கருத்து மனதில் ஆழமாகப் பதியும்.
புத்தகத்தை போன்ற நல்ல நண்பன் வேறு எதும் இருக்க முடியாது. எனவே மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தகங்களை தேடிப் படிக்க வேண்டும் என்று பேசினார்.
English summary
Puducherry CM Rangasamy has advised the students to read more to enrich themselves.
Story first published: Sunday, September 29, 2013, 15:58 [IST]