என் மாநில மக்களின் நலனுக்கான எந்தவித அவமானத்தையும் ஏற்கத் தயார் : சொல்வது ஆந்திரமுதல்வர் சந்திரபாபு
என் மாநில மக்களின் நலனுக்கான எந்தவித அவமானத்தையும் ஏற்கத் தயார் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
Recommended Video

அமராவதி: என் மாநில மக்களின் நலனுக்காகவும் அவர்களுக்கான நீதிக்காகவும் எந்த விதமான அவமானங்களையும் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி, தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து போரட்டம் நடத்தி வருகின்றன. இதற்காக இந்த இரண்டு கட்சிகளும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்துள்ளன.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி போராடி வரும் ஆந்திர மாநில தெலுங்கு தேச கட்சி எம்.பி.க்களுடன் அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வீடியோ கான்பரன்ஸிங்கில் உரையாடினார். அப்போது, நமக்கு கிடைக்க வேண்டிய நீதி தொடர்ந்து மறுக்கப்படுகிறது. ஆனால், அதற்காக நாம் விடாமல் போராட வேண்டும். மத்திய அரசும், பாஜகவும் தொடர்ந்து நம்மைத் தாக்கிப் பேசுகிறார்கள். ஆனால், மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதிக்காகவும், அவர்களின் நலனுக்காகவும் எந்த வித அவமானத்தையும் தாங்கிக் கொள்ள நான் தயாராக உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டசபைக் கூட்டத்திலும் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட, தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கறுப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர். அதுமட்டுமன்றி, சந்திரபாபு நாயுடு கூட்டவிருக்கும் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கும் அவர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து செல்லவும் முடிவெடுத்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications