ரூ.40 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பதுக்கல்: பறிமுதல் செய்வது எப்போது?
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.40 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை பறிமுதல் செய்யாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாவட்ட எஸ்பி அலுவலகம் அருகே உள்ள மாதவன் நகரில் கடந்த மே 1ம் தேதி ஒரு குடோனில் வைக்கப்பட்டிருந்த கண்டெய்னரை எஸ்பி அஸ்வின் கோட்னிஷ் தலைமையிலான போலீசார் சோதனையிட்டு அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 மெட்ரிக் டன் எடையிலான ரூ.10 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இவை தூத்துக்குடி துறைமுகம் வழியாக துபாய்க்கு கடத்தப்பட இருந்த நிலையில் போலீசாரின் நடவடிக்கையால் தடுக்கப்பட்டது. இந்த வழக்கை போலீசார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே மேலும் 4 கன்டெய்னர்களில் செம்மரக்கட்டைகள் தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்டு புறநகர் பகுதிகளில் உள்ள குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இவற்றின் மதிப்பு ரூ.40 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்தவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் தூத்துக்குடியில் இருந்து துபாய்க்கு கன்டெய்னரில் வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக ஆவணங்களை போலியாக சமர்ப்பித்து செம்மரக்கட்டைகளை மறைத்து கடத்திச்செல்ல இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. ஆனால், அதற்குள் கடத்தல் புள்ளிகள் சுதாரித்துக்கொண்டு சம்பந்தப்பட்ட கன்டெய்னரை விட்டு தப்பி சென்று விட்டனர். சுங்கத்துறையினர் கன்டெய்னரை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
இந்த செம்மரகடதத்தலில் அமெரிக்க ஆயுத கப்பலில் தொடர்புடைய சிலருக்கு தொடர்பு இருப்பது கூட தெரிந்தும் வனத்துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இதில் தொடர்பு இல்லாத சிலரை கைது செய்ததாக புகார் எழுந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications