ஈரோடு ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளர்களின் வெள்ள நிவாரண பணத்தை கொள்ளையடித்த கொடூரம்
ஈரோடு: சென்னை, கடலூர் மழை வெள்ள நிவாரணத்துக்காக ஈரோடு ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளர்கள் வைத்திருந்த ரூ75,000 கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு தரப்பினரும் உதவி வருகின்றனர். இதேபோல் ஈரோடு ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளர்களும் நிவாரண பணிக்காக பணம் கொடுத்தனர்.
மொத்தம் ரூ75 ஆயிரம் வசூலிக்கப்பட்டு அது ஈரோடு ரயில்வே குட்செட் பிரிவில் உள்ள சுமை தூக்கும் பணியாளர்கள் ஓய்வறையில் வைக்கப்பட்டிருந்தது.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே நுழைந்து இந்த ரூ75 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இன்று காலை அந்த ஓய்வறைக்கு வந்த தொழிலாளர்கள் ஜன்னல் உடைக்கப்பட்டு நிவாரண தொகை திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications