அம்மா முதல்வராக பண்ணாரி அம்மனுக்கு தீ மிதித்த அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்
ஈரோடு: பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர். தமிழக அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், திருப்பூர் லோக்சபா தொகுதி எம்.பி சத்யபாமா ஆகியோர் அம்மா முதல்வராக வேண்டி பயபக்தியோடு தீ மிதித்தனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான குண்டம் விழா மார்ச் 23ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவின், முக்கிய நிகழ்வான குண்டம் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு படைக்கலத்துடன் திருக்குளம் சென்று அம்மனை அழைத்து, வரம் கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அங்கு, சருகு மாரியம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் உற்சவர் குண்டத்துக்கு அழைத்து வரப்பட்டது. அதிகாலை 3.55 மணிக்கு பூசாரி ராஜசேகர் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தார். தொடர்ந்து, படைக்கலத்துடன் வந்த பக்தர்கள் உற்சவரை சப்பரத்தில் சுமந்தபடி குண்டம் இறங்கினர்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம், திருப்பூர் லோக்சபா உறுப்பினர் சத்தியபாமா ஆகியோர் ஜெயலலிதா வழக்குகளில் இருந்து விடுபடவும் மீண்டும் முதல்வராகவும் வேண்டி பயபக்தியோடு தீ மிதித்தனர்.
இவர்களைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி அமுதா, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மா.வீரசண்முகமணி, சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் ஆகியோரும் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்நிகழ்ச்சி மாலை 5.30 வரை நடைபெற்றது. இதில், தமிழகம், கர்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, கால்நடைகள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
-
ரஜினிகாந்த் சொன்ன ஒற்றை வார்த்தை.. அதிமுகவை பாதாளத்துக்கு தள்ளிய ரிசல்ட்! 173 இடங்களில் திமுக வெற்றி -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications