குடியரசு தின விழாவில் மனைவியுடன் பங்கேற்ற முதல்வர் ஓ.பி.எஸ்.. கட்சியினர் ஆச்சரியம்

பொது நிகழ்ச்சியில் மனைவியுடன் பன்னீர்செல்வம் மேடையில் அமர்ந்திருந்தது இதுதான் முதல் முறை என்பதால் கட்சியினரும் கூட ஆச்சரியமாக அதை பார்த்தனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெரினாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது மனைவியுடன் பங்கேற்று ஆச்சரியம் ஏற்படுத்தினார்.

எம்.எல்.ஏ., அமைச்சர், ஜெயலலிதா பதவி வகிக்க முடியாத காலங்களில் தற்காலிகமாக முதல்வராக பொறுப்பேற்றது போன்ற எந்த ஒரு காலகட்டத்திலும் பொது மேடையில் தனது மனைவியுடன் ஒன்றாக முகம் காட்டாதவர் ஓ.பன்னீர்செல்வம்.

RepublicDay: O.Pannerselvam and his wife witnessing cultural programmes at Marina

இன்று நாட்டின் 68வது குடியரசு தின விழா சென்னை மெரினா பகுதியில் நடைபெற்றது. பன்னீர்செல்வம் தேசிய கொடியேற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

இதையடுத்து மாமவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை மேடையில் அமர்ந்தபடி பன்னீர் செல்வம் பார்வையிட்டார். அப்போது அவரின் அருகே இடதுபுறத்தில் உள்ள இருக்கையில், பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி அமர்ந்திருந்தார். கலை நிகழ்ச்சிகளை கை தட்டி உற்சாகப்படுத்தினார். பேரப்பிள்ளைகளும் நிகழ்ச்சியை பார்க்க வந்திருந்தனற்.

RepublicDay: O.Pannerselvam and his wife witnessing cultural programmes at Marina

பொது நிகழ்ச்சியில் மனைவியுடன் பன்னீர்செல்வம் மேடையில் அமர்ந்திருந்தது இதுதான் முதல் முறை என்பதால் கட்சியினரும் கூட ஆச்சரியமாக அதை பார்த்தனர். அதேநேரம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் மன்னார்குடி கோஷ்டியினர் நிகழ்ச்சிக்கு வரவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+