வங்கிகளில் பணம் எடுப்பதற்காக கட்டுப்பாடு முழுமையாக நீங்கும்... சக்திகாந்த தாஸ் தகவல்
வங்கிகளில் இருந்துபணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முழுமையாக விரைவில் நீங்கும் என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளை ரிசர்வ் வங்கி எடுத்துவருவதாகவும் அவர் கூறினார்.
சென்னை: வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு விரைவில் முழுமையாக நீக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திதாந்த தாஸ் கூறியுள்ளார்.
500 மற்றும் 1000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து எவ்வளவு பணம் வங்கியில் இருந்து பொதுமக்கள் எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றுவது என்றும், ஏடிஎம் மையங்களில் எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்றும் அவ்வப்போது மத்திய அரசு அறிவித்துக் கொண்டிருந்தது. இந்நிலையில், இன்று வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு விரைவில் நீங்கும் என பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
சேமிப்பு கணக்குகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ரிசர்வ் வங்கி விரைவில் முடிவு எடுக்கும் என்று தெரிவித்த சக்திகாந்த தாஸ், ஒரு சிலர் மட்டுமே வாரத்திற்கு 24,000 ரூபாய் பணத்தை வங்கிகளில் இருந்து எடுத்து வருகின்றனர் என்று கூறினார்.
இதேபோல் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணிகள் முடியும் நிலையில் உள்ளதாகவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications